திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கான பிரத்தியேக பேருந்து சேவையை தொடங்கி வைத்த பின்பு போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் பேட்டி:
பள்ளி மாணவர்களுக்கான பிரத்தியேக பேருந்து சேவை காலையில் மாணவர்களை அழைத்து சென்று மாலையில் மீண்டும் அவர்கள் இருக்கும் பகுதிக்கு அழைத்து வரும் வகையில் செயல்படுகிறது. மற்ற நேரங்களில் அந்த பேருந்து வழக்கமான நடைகளில் இயக்கப்படும். ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்து அந்த சேவை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
ஸ்மார்ட் மீட்டர் திட்டம் நடைமுறைக்கு வந்த பின்பு மாதம் ஒருமுறை மின் கணக்கீடு செய்யம் திட்டம் அமல்படுத்தப்படும்.


