திருச்சி:
எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே சங்கத்தின் பொன்மலை பணிமனை லோகோ கிளை செயற்குழு கூட்டம் சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமையில் பொன்மலையில் இன்று நடைபெற்றது.
இதில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ரயில்வேயில் தனியார் மயம் கூடாது, பொன்மலைப்பணிக்கு தரம் வாய்ந்த உதிரி பாகங்களை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


