Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

கடலோர மாவட்டங்களில் 2 நாட்கள் தங்கிச் செல்லும் “டிட்வா” ஆழ்ந்த* *காற்றழுத்த தாழ்வு மண்டலம்..

0

*வலுவிழந்த “டிட்வா” புயல்;*

*கடலோர மாவட்டங்களில் 2 நாட்கள் தங்கிச் செல்லும் “டிட்வா” ஆழ்ந்த* *காற்றழுத்த தாழ்வு மண்டலம்..*

*வானிலை மையத்தின் குழப்பமான அறிவிப்புகளால் தொடரும் கனமழை…*

*பள்ளிகளுக்கு விடுமுறை இல்லாததால் ‘புலம்பும்’ பெற்றோர்கள்..!*

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த “டிட்வா” புயல், நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில்…

மணிக்கு *10* கி.மீ வேகத்தில், சென்னையில் இருந்து *50* கி.மீ தூரத்திலும்…

கடலூரில் இருந்து *150* கி.மீ தூரத்திலும்…

புதுச்சேரியில் இருந்து *130* கி.மீ தூரத்திலும் மையம் கொண்டுள்ளது.

வடதமிழக கடலோரப் மாவட்டங்களை நெருங்கி வரும் ‘ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக…’

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

அடுத்த *12* மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

கடலோர மாவட்டங்களில், *2* நாட்கள் நிலைகொண்டு செல்லும் என கணிப்பு..

இதனால், அடுத்த *2* நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பு.

மேலும், வானிலை ஆய்வு மையத்தின் தெளிவில்லாத அறிவிப்புகளால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு இல்லை.

கனமழையால், பெரும் சிரமத்துடன் பள்ளிகளுக்கு சென்ற மாணவர்களைக் கண்டு பெற்றோர்கள் ‘புலம்பும்’ நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.