சொர்க்கவாசல் திறப்பு வைபவத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் ஸ்ரீரங்கம் கோவிலில் ஆலோசனைக் கூட்டம்…
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னொருக்கம்: மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் ஆலோசனை
வரவிருக்கும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மற்றும் சொர்க்கவாசல் திறப்பு வைபவத்தை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் பாதுகாப்பு, ஒழுங்கு மற்றும் பொது வசதிகள் குறித்த ஆய்வு மற்றும் திட்டமிடலுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு. சரவணன் அவர்கள் தலைமையேற்று, கோவில் நிர்வாகம், காவல் துறை, போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் இணைந்து விழா ஏற்பாடுகளை பரிசீலித்தார்.

பெரிய திரளான பக்தர்கள் வருகை தரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்ட நெரிசல் மேலாண்மை, குடிநீர், மருத்துவ வசதி, போக்குவரத்து ஒழுங்கமைப்பு போன்ற அம்சங்கள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன.
வைகுண்ட ஏகாதசி நாளன்று அதிகாலை நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு வைபவத்தை முன்னிட்டு தேவையான அனைத்து பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


