வாக்குத்திருட்டு என்பது ஒரு தேசவிரோத நடவடிக்கை என மக்களவையில் எம்பி ராகுல்காந்தி ஆவேசமாக பேசினார்.
மக்களவையில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, “ஜனநாயகத்தை சிதைப்பதற்காக தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு பயன்படுத்துகிறது. சிபிஐ தலைவரை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏன் பரிந்துரைக்க கூடாது? தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவில் ஏன் தலைமை நீதிபதி இல்லை? தலைமை தேர்தல் ஆணையரை, பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தேர்வு செய்வது ஏன்? பிரதமரின் நேரத்தைப் பொறுத்து, தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படுகிறது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்பது சட்டவிரோதமானது, அதை நிறுத்த வேண்டும். 150 கோடி மக்களின் வாக்குகளை சேர்த்து பின்னப்பட்ட துணி தான் நமது இந்தியா. வாக்குத்திருட்டு என்பது ஒரு தேசவிரோத நடவடிக்கை. ஹரியான சட்டப்பேரவை தேர்தலில் ஒரு பெண் பெயரில் 22 இடங்களில் வாக்குப்பதிவு நடந்தது எப்படி? பிரேசில் மாடல் அழகிக்கு இந்திய வாக்காளர் பட்டியலில் இடம் கிடைத்தது எப்படி? வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களில் உள்ள பதிவுகள் அழிக்கப்பட்டது ஏன்?


